நம்ம Computer ல நாம பாட்டுக்கு வேலை செய்துகிட்டு இருப்போம். திடீரென எதோ ஒரு காரணத்துக்காக ரொம்ப அவசரமா ஒரு வலை பக்கத்த திறப்போம். அந்து Load ஆகும் போது ஒரு நீளமான கோடு வரும் அப்புறம் அந்த கோடு Screen முழுக்க விரியும். என்னன்னு பாத்தா எதாவது ஒரு விளம்பரம் வந்து நிக்கும். அப்படியே நம்ம Monitor அ தூக்கி போட்டு ஒடச்சி போட்டுலாம் போல தோணும். ஆனா அதெல்லாம் செய்யாம Close Button எங்க இருக்கன்னு தேடி, அத அழுத்திட்டு வேலைய பாப்போம்.

   இதை தடுப்பதை பற்றி ஏற்கனவே வின்மணி எழுதிய பதிவில் நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி இல்லை எனில் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு வாங்க. பார்த்தாச்சா? அவங்கதான் சொல்லிட்டன்களே, நீ என்னாத்த புதுசா சொல்ல போற-னு கேக்குறிங்களா? அவசரப்படாதிங்க சொல்லுறேன்.

   வின்மணி எழுதிய பதிவில் ஒரு தளம் விளம்பரங்களை தடுக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். நான் சொல்ல போவதில் ஒரு ப்ரோக்ராம் விளம்பரங்களை தடுப்பதை நாம் பார்க்கப்போகிறோம். புரியலையா? அவங்க சொன்னதுல ஒவ்வொரு தடவையும் அந்த தளத்துக்கு போய் நாம உலாவனும் (Browsing).  ஆனா இதுல ஒருதடவ இன்ஸ்டால் பண்ணிட்டாளே போதும். அப்புறம் நாம இத இன்ஸ்டால் பண்ணினதையே மறந்துடலாம்.  இது என்ன Horlicks, Complan விளம்பரம் மாதிரி இருக்குதுன்னு நினைகிறீங்களா??? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியணும்-னு சொன்னேன்.

Picture 1
   அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கூகிள் Chrome இன்ஸ்டால் பண்ணி இருக்கிங்களா? நீங்க Chrome பயன்படுத்தினா இந்த பாராவ படிக்காம அடுத்த பாராவ படிங்க... அப்புடி இல்லையா? நான் தான் முன்னாடியே Chrome பத்தின அருமை பெரும எல்லாம் சொன்னேனே.... இன்னும் இன்ஸ்டால் பண்ணாம என்ன பண்ணுனீங்க?... சரி பொழச்சி போங்க. இங்க கிளிக் செஞ்சி இன்ஸ்டால் செய்த பின்ன இந்த பதிவ தொடர்ந்து படிங்க.

Picture 2
   Chrome ன் வலது மூலையில் உள்ள ஸ்பேனர் வடிவத்தில் உள்ள செட்டிங்க்சை கிளிக் செய்து (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் கீழுள்ள Get more extensions என்பதை கிளிக் செய்யவும். பிறகு வரும் வலை பக்கத்தில் Most popular என்பதை கிளிக் செய்த (Picture 2) பின் வரும் பட்டியலில் முதலில் உள்ள AdBlack என்பதை கிளிக் செய்து install என்ற Button னை  (Picture 3) அழுத்தவும். அப்பால வரும் dialog box லும் install என்ற Button னை (Picture 3) அழுத்திய பின் ஏதேனும் விளம்பரம் உள்ள பக்கத்தை திறந்து பாக்கவும். விளம்பரங்களை தடுப்பதால் அந்த பக்கம் முன்பைவிட வேகமாக திறப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Picture 3
   ஒழுங்கா வேலை செய்தா? சரி விளம்பரத்த பர்க்குவர்க்காகவே ஒரு பக்கத்த திறந்து பாக்கணும். அப்ப என்ன செய்யலாம் னா.... போன பாரா ஆரம்பத்துல சொன்ன மாதிரி (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் AdBlack என்பதற்கு நேராக உள்ள Option (Picture 4) என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பக்கம் திறக்கும் அங்குள்ள tab ல் கடைசியாக உள்ள Exicuted Sites (Picture 5) என்பதில் கிளிக் செய்து காணப்படும் எழுத்துப் பெட்டியில் விளம்பரத்தினை தடுக்க தேவையில்லாத வலை பக்கத்தின் முகவரியை கொடுத்து Add (Picture 5) செய்ய வேண்டும். இதில் Domain Name மட்டும் கொடுக்கவும் " http://, / " போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

Picutre 4
   அப்படி இல்லாமல் எல்லா பக்கத்தையுமே விளம்பரத்துடன் பார்க்க வேண்டும் என்றால் AdBlack அருகில் (Picture 4) உள்ள Disable என்பதை கிளிக் செய்வதன் மூலம் செயலிழக்க செய்ய முடியும். வேண்டும் என்றால் Enable செய்து கொள்ளலாம். இது மட்டுமல்ல இன்னும் பயனுள்ள Extensions பல இருக்கின்றது பிடித்திருந்தால் மற்றவற்றையும் பயன்படுத்தி பாருங்கள்.

Picutre 5
   இது தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாகவும், தெரிந்தவர்களுக்கு நியாபகமூட்ட கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை எழுதியுள்ளேன்.

   இருங்க, புரிஞ்சதா இல்லையா? செய்து பார்த்திங்களா, இல்லையா? ஏதும் டவுட் வந்துச்சா, இல்லையா? சொல்லிட்டு போகணும் ஆமா....
   65 ஆண்டுகளாக அழிந்ததாக கருதப்பட்ட "தேவாங்கு" இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது தேவாங்கை தேடுவது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வேறொரு இனத்தை அங்கு தேடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம் யார் கண்டது??? இதுக்கு மேல பேசுனா உள்ள தூக்கி போட்டாலும் போட்டுடுவாங்க. அதனால் நான் நேரா மேட்டருக்கு வரேன்.

   "தேவாங்கு" இதை பற்றி அதிகம் கேள்வி பட்டு இருக்க மாட்டோம். நமது நண்பர் ஒருவர் 'தேவாங்கு பக்கங்கள்' என அவரது பக்கத்துக்கு தலைப்பிட்டுள்ளார். பெரியவங்க "மூஞ்ச பாரு தேவாங்கு மாதிரி!" அப்புடின்னு திட்டுவதை பார்த்திருக்கேன்.(யாரை திட்டினாங்க-னு கேக்காதிங்க என்னோட சீக்ரெட் எல்லாம் நான் வெளியில சொல்லுறது இல்ல).  இது மரங்களுக்கு இடையே வாழும் 350 கிராம் வரை எடையுள்ள ஒரு சிறு பாலூட்டி விலங்கு. முட்டை, பூச்சி, பல்லி போன்றவற்றை உண்ணும். இது இரவில் தான் இறை தேடும். இரவில் இதன் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

   உலகில் மனிதன் காடுகளை மட்டும் அல்ல அதில் உள்ள பல உயிரினங்களை அழித்துக்கொண்டு இருக்கிறான். இந்த தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. மனிதனின் சுயநலம் காரணமாக இலங்கையில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவை அழியும் நிலைக்கு காரணமானது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். அங்கு இதன் எண்ணிக்கை 100 க்கும் குறைவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளனர். 

   தமிழகத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொய்கைமலை வனப்பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருவதாக கருதப்படுகிறது.  இங்கும் இவை நிம்மதியாக இல்லை. குறவர் போன்றவர்களால் அதிகமாக வேட்டையாடப்படுகிறது. ஆஸ்துமா நோயை குணமாக்கும் என்ற தவறான எண்ணத்திலும் இவை வேட்டையாடப்படுகிறது. எனவே தேவாங்கை காக்க மணப்பாறை பொய்கைமலையில் சரணாலயம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

   எது எப்படி இருப்பினும் விலங்குகள் மட்டும் அல்ல மனிதனும் தன் அழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறான் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
    கூகிள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய வாடிக்கையாளர்கள் எப்போதும் வேறு ஒருவரிடம் செல்ல விடக்கூடாது என்று எப்பொழுதோ முடிவுக்கு வந்து விட்டது.  தனது சேவைகளை நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டே வருகிறது..... அதில் ஒரு படியாகத்தான் இன்று பல கணக்குகளை பயன்படுத்த வகை செய்துள்ளது.

    Google Chrome, நல்ல வேகமான, எளிமையான உலாவி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. நாம் Chrome ல் உலாவும் போது ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்கு இருந்தால்,  அந்த இரண்டாவது கணக்கை திறக்க நாம் Internet Explorer அல்லது Mozilla fire fox திறந்து அதில் நமது இரண்டாவது கணக்கை திறப்போம்.  இப்போது அதையும் நீங்கள் Chrome ல் தான் திறக்க வேண்டும் என கூறி கூகிள் இப்போது தனது உலாவியின் சமீபத்திய பதிப்பில் உள்ள  incognito window மூலம் எத்தனை GMail கணக்கையும் திறக்க முடியும். இதை பெற Chrome உலாவியில் Ctrl + Shift + N போன்றவற்றை அழுத்துவதன் மூலம் பெறலாம். அல்லது வலது மூலையில் settings கிளிக் செய்து அதில் New incognito window என்பதை கிளிக் செய்வதன் மூலமும் பெற முடியும்.
    இதற்காக மற்றொரு வழியும் அறிமுகப்படுத்தி உள்ளது இதன் சிறப்பு... மற்ற உலாவிகளில் இனி நாம் ஜீமெயில் திறந்து வைத்துகொண்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு இன்னொரு ஜீமெயில் கணக்கை திறந்தால் நமக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை பயன்படுத்தபோகிறீர்களா என்ற செய்தி வரும் இதில் நாம் வேண்டும் என்றால் ON என்பதையும் வேண்டாம் என்றால் OFF என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன் மூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தி பார்த்து கருத்துகளை கூறவும்......


   இதை பார்த்தாவது திருந்த வேண்டியவங்க திருந்தினா சரி...... இந்த படத்தை அனைவரையும் காண, கீழ உள்ள ஐகான்ல ஓட்டு போடணும். என்ன சரியா?......
  செம்மொழி மாநாடு முடிஞ்சாச்சு. அதுக்காக தமிழ மறந்துட முடியுமா? இம்மாநாடு பற்றிய சில முக்கியமான தகவல்கள் நாம் தெரிந்துகொள்ளக்கூடியவை.  கம்பீரமான திருவள்ளுவரின் உருவசிலை, அதன் பின்னணியில் சுனாமி அலை. "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என்ற அவரது வரிகள், நன்றாகத்தான் வடிவமைத்திருக்கிறார் ஓவியர் சந்ரு.

   ஆம் நண்பர்களே இந்த இலச்சினை உருவாக்கியது எழும்பூர் கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. சந்ரு.  இதை உருவாக்க அவரது தலைமையில் ஒருமாதம் முயற்சித்து உருவாக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான அறிவிப்பு வந்தவுடன் தஞ்சை தமிழ் பல்கலைகழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் அவரை தொடர்பு கொண்டு வடிவமைக்க கூறியுள்ளார்.  அதில் திருவள்ளுவர் சிலை இருக்க வேண்டும் எனவும், பெருமை, பண்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் வெளிப்படுத்துவதாக அது இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

   15 நாட்களில் 25 க்கும் மேற்பட்ட இலச்சினைகளை திரு ராஜேந்திரனிடம் காண்பித்து இருக்கிறார் அவர் மேலும் எதிபார்ப்பதாக கூறி, தமிழின் பெருமைகளை தவிர மேலும் அதன் அழிய நிலை தன்மையையும் அது வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

   சமீபத்திய அழிவு சுனாமிதான் அதை பின்னனியி வைக்கலாமா என இலச்சினையில் அழிவை காட்டுவதால் பிறர் விமர்சிக்கக்கூடும் என்ற ஒரு சிறிய பயத்துடன் கேட்டார்.  'தமிழும் வள்ளுவமும் எந்த எதிர்ப்பு பேரலையையும் தாண்டி உலகுள்ளவரை வாழும்' என்பதற்கு அடையாளமாக சுனாமியை வைத்தால் பொருத்தமாகத்தான் இருக்கும் என அவர் கூறியதால், இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.

   வடிவமைத்த பிறகு தலைப்பு என்ன வைக்கலாம் என திரு ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் முதல்வரிடம் கேட்டு சொல்கிறேன். என கூறி முதல்வரிடம் கேட்டுள்ளார்.  முதல்வர் எழுதி கொடுத்த தலைப்பு "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்". அது திரு சந்ருவிடம் அனுப்பப்பட்டது. அவரது கையெழுத்திலேயே வைத்து விடலாம் என இலச்சினையில் அதை பொருத்திவிட்டார்.

   பின்பு முதல்வரிடம் இலச்சினை அனுப்பப்பட்டது. முதல்வருக்கு மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் தொல்லியல் தரவுகள் சரிதானா என்று திரு ஐயவதாரம் மகாதேவனிடம் உறுதி படுத்திய பின்னர், தலைமைச் செயலகத்தில் ஐயவதாரம் அவர்களால் வெளியிடப்பட்டது.

   இலச்சினையில் உள்ள தரவுகள் மொத்தம் ஏழு இதில் முதல் தரவு - இறைவனை குறிப்பதாகவும், இரண்டாவது தரவு - உலக அளவில் அசையும் உருவத்தை முதலில் பதிவுசெய்த சிற்பம். மூன்றாவது தரவு - காளை (விவசாய அடிப்படை சிறப்பை குறிப்பதற்காக). நான்காவது தரவு - கப்பல் (நமது வணிக சிறப்பை உணர்த்துகிறது). ஐந்தாவது தரவு - கலைமான் (நமது கலைச் சிறப்பை உணர்த்துகிறது). ஆறாவது தரவு - சங்க இலக்கியத்தில் புறத்திணையில் வரும் வேலன் வேட்டயடுதலை குறிக்கிறது. எழாவது தரவு - நீரருந்தும் காளை.

   இவை அனைத்தும் தமிழரது கலாச்சார பெருமையை எடுத்துக்கூறும் என்ற நோக்கத்துடன் வடிவமைத்து இருக்கிறார்கள்.

   மனிதனால் நம்பமுடியாத அளவிற்கு பல செயல்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், மெய்சிளிர்க்கக்கூடிய அளவிலும் காணப்படுகின்றன. அவற்றை காணும் போது இது போன்றும் நடக்குமா? என்று வியக்கக்கூடிய அளவிலான புகைப்படங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

நகரும் கற்கள்

   ஒரு குண்டுக்கல் தானாக நகர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இவை காணப்படுகின்றன.
   பனிக்கட்டி உருகும் நிலையில் அதனால் எளிதாக நகர முடியும். இதே போன்று தான் இந்த கற்களும் நகருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மழைநீர் கற்களுக்கு அடியில் உறைந்து இருக்கும் போது பலத்த காற்று அடித்தல் நீர் உருகி கற்கள் நகரும் என்பது அவர்களது விளக்கம். இவை எப்போது எந்த திசையில் நகரும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.

குழம்புப்பாறைத்தம்பம்


   இவை ஆப்ரிக்கா, ஆசியா, ஈரோப், வடக்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மனிதன் உருவாக்கியது போல மிக அழகாக அமைந்துள்ளது. 
மேலும் குறிப்புக்கு http://www.luzicke-hory.cz/mista/index.php?pg=zmpansc

    நீல துளைகள்

       இந்த துளைகள் நீருக்கடியில் வட்டமாக 8000 மீட்டர் ஆழம் கூட இருக்கக்கூடும் எனவும், இதன் அகலம்(விட்டம்) இரண்டிலிருந்து இருநூறு மீட்டர் வரை காணப்படும்.  இதன் அகலமானது 250 வருடத்திற்கு ஒரு சென்டி மீட்டர் வளரும் என கணித்திருக்கிறார்கள். ஐஸ்லாந்தில் இவை காணப்படுகின்றன.

    சிவப்பு அலைகள்

       அமில மழை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பள்ளி வகுப்புகளில் படித்திருப்போம்.  கடலுக்கு அருகில் செல்லும் மேகங்கள் சில நேரங்களில் அமிலங்களை கொட்டிவிட்டு போகும். இந்த அமிலங்கள் கடல் நீரோடு வினைபுரிந்து இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும்.  இந்த அலைகள் கடல் உயிரினங்களுக்கு தீங்கினை விளைவிக்கக்கூடும்.

    பனி வட்டங்கள்

       இது பனிக்கட்டி தவிர வேறு ஏதும் காணப்படாத நீர்நிலைகளில் காணப்படும். கரைபகுதியில் அல்லாமல் நடுபகுதியில் பனிக்கட்டி தோண்டுவதால் ஏற்படுகிறது. இது அதிகபட்சமாக 500 அடி விட்டம் வரை காணப்படலாம்.

    விழிவில்லை மேகங்கள்

       ஓரிடத்தை மையமாகக்கொண்டு காற்று நீண்ட நேரம் சுழலும் போது அதை சூழ்ந்துள்ள மேகங்கள் இது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இவை சில நேரங்களில் மேலும் கீழும் வேறு வேறு வடிவங்களாக நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

    ஒளி தூண்கள்

       பக்கவாட்டு மேகங்களின் வழியே சூரிய ஒளி ஊடுரும் போது இது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

    ஒளி வட்டம்

       இதுவும் மேலே பார்த்த ஒளி தூண்கள் போல மேகம் படிக உருவில் இருக்கும் போது அதன் வழியே ஊடுருவும் சூரிய ஒளி இவ்வாறு தோன்றும்.

    நெருப்புச் சுழல்

       காட்டில் நெருப்பு பற்றி எரியும் போது காற்று சுழல் ஏற்பட்டால் காற்றுடன் சேர்த்து நெருப்பும் சுழல்வதால் இந்த நம்பமுடியாத சுழல் நமது கண்களை மிரட்டும்.  இது நகர்தபடியே 10 அடி அகலத்தில் 30 முதல் 200 அடி வரை எழும்பும்.


       இருங்க இருங்க.... எதாவது கருத்து சொல்லிட்டு, ஒட்டு போட்டுட்டு போங்க....
    Powered by Blogger.