1945 ல் ஆகஸ்ட் 6

0 Comments
   இரண்டாம் உலகப்போரில் 1945 ஆகஸ்ட் 6, அன்று அமெரிக்காவின் லிட்டில் பாய் விமானம் ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மேல் பறந்து சென்று அணுகுண்டை வீசியது. அதன் பின் இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 9 அன்று நாகசாஹி நகரின் மீது Fat Man விமானம் அணுகுண்டு வீசித் தாக்கியது. இந்தக் கோரத் தாக்குதல்களில் நேரடியாகப் பலியானவர்கள் தவிர்த்து, காயங்கள், தீக்காயங்கள், பலர் பின்னர் உயிரிழந்தனர் ஹிரோஷிமாவில் 1,40,000 பெரும், நாகசாகியில் 74,000 பெரும் பலியானார்கள்.


   இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா-நாகசாகி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 6 அப்பெரழிவு நிகழ்ந்து 65 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த தினத்தில் ஜப்பானில் உள்ள நினைவுச் சின்னத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, இறந்த தங்கள் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.  சாலைகளில் போவோர், வருவோர் கூட குண்டு வீசப்பட்ட காளை 8:15 மணிக்கு தங்கள் வேலைகளை நிறுத்தி, மறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் மீண்டும் தொடர்வது வழக்கம். இந்த குண்டு வெடிப்போடு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து ஜப்பான் சரணடைவதாக கையெழுத்திட்டது.


You may also like

No comments:

Powered by Blogger.