விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்? இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா? அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.  என்னை பொறுத்தவரை நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்களிடையே அன்பை பரிமாறுவதே விழாக்களில் உள்ள நன்மை என கூறுவேன்.
   ரக்க்ஷா பந்தன், இது இந்து மத லூனார் நாள்காட்டியின் 'ஸ்ராவன்' மாதத்தில் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழை பொறுத்தவரை பெரும்பாலும் ஆவணி மாதத்தில் முதல் பௌர்ணமி நாளில் வரும். அதன் படி இந்த வருடம் ஆங்கில நாளில் இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) ஆகும். இந்துக்கள் பண்டிகைகளிலேயே இது தான் மிகவும் நல்ல பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது.

பொருள்
   இந்தியில் ரக்க்ஷா என்றால் பாதுகாப்பு (Production) என்று பொருள். இது Sanskrit மொழியில் இருந்து பிறந்த வார்த்தை என கருதப்படுகிறது. பந்தன் என்பது கட்டுவதை குறிக்கும்.

   பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கையில் மஞ்சள் நூல் கட்டி இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனை ஒரு ஆண் ஏற்றுக்கொள்வதால், அந்தச் சகோதரியின் "பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் துணையாக இருப்பேன்" என உறுதி அளிக்கிறான். ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். இந்த பண்டிகையை ஒரு மதப் பண்டிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என கூறலாம். வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த விழா, தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருவது மகிழ்ச்சி தரக்கூடியதே. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காண முடிகிறது.

புராணக் கதை
   பலி என்ற மன்னன் விஷ்ணுவின் தீவிர பக்தன். பலியின் ராஜ்ஜியத்தைக் காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார் லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் இட்டுக்கொண்டு பலியிடம் அடைக்கலம் புகுந்தாள் அப்போது பூர்ணிமா தினம் அன்று, அவனை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.

   புராணங்களை நான் நம்புவதில்லை. எது எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும் நல்லெண்ணம் ஆரோக்கியமான விஷயம் தானே....

வரலாறு
   பெண்கள் தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வருகிறது.

   மாமன்னர் அலெக்சாண்டருக்கும், போரஸிசிர்க்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அலெக்சாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்கு சென்று போரஸின் கையில் ஒரு ராக்கியை கட்டிவிட்டு வந்தவழியே திரும்பிவிட்டாள்.

   மறுநாள் போரில் அலெக்சாண்டரை கீழே தள்ளி ஈட்டியை பாய்ச்ச எண்ணிய போரஸ் தன் கையில் இருந்த ராக்கியை பார்த்து விட்டு, "உனது மனைவி என்னது சகோதரி. என் சகோதரி விதவையாக கூடாது" என்று கூறி திரும்பி சென்றதாக வரலாறு.

 கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைகளுட‌ன் தாக்க வரும் போது, ‌சி‌த்தூ‌ர்க‌ர் ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. ரா‌ணி ப‌த்‌மி‌னி ரா‌க்‌கி அனு‌ப்‌பியத‌ன் மூல‌ம் அ‌ண்டை நா‌ட்டு ம‌‌ன்ன‌‌ர்க‌ள், தன் சகோதரியையு‌ம், அவ‌ர்களது ஆ‌ட்‌சி‌ப் பகு‌தியையு‌ம் காக்க வே‌ண்டிய கடைமை ஏ‌ற்ப‌ட்டது. அதனா‌ல் அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்‌‌பி சு‌ல்தா‌ன் அலாவு‌தீனுட‌ன் போ‌ர் பு‌ரிய ஏ‌ற்பாடு செ‌ய்தது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இந்த நாளின் மற்ற சிறப்பு
   இந்து சமுதாயத்தில் இந்த நாளில் பல பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  ஸ்ராவன் பூர்ணிமா என்ற விழா பொதுவாக பல வட இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இதே விழா நரலி பூர்ணிமா என்ற பெயரில் மகாராஷ்டிராவிலும், அக்ஷர் பூர்ணிமா என்ற பெயரில் குஜராத்திலும் கொண்டாடுகின்றனர். இதே நாளில் இந்த வருடம் ஆவணி அவிட்டம் என்ற ஒரு விழாவினை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

   நல்லது அதிகமா இருந்தா கொண்டாடலாமே.... நல்லா இருந்தா ஓட்டு போடலாமே....
   இரண்டாம் உலகப்போரில் 1945 ஆகஸ்ட் 6, அன்று அமெரிக்காவின் லிட்டில் பாய் விமானம் ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மேல் பறந்து சென்று அணுகுண்டை வீசியது. அதன் பின் இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 9 அன்று நாகசாஹி நகரின் மீது Fat Man விமானம் அணுகுண்டு வீசித் தாக்கியது. இந்தக் கோரத் தாக்குதல்களில் நேரடியாகப் பலியானவர்கள் தவிர்த்து, காயங்கள், தீக்காயங்கள், பலர் பின்னர் உயிரிழந்தனர் ஹிரோஷிமாவில் 1,40,000 பெரும், நாகசாகியில் 74,000 பெரும் பலியானார்கள்.


   இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா-நாகசாகி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 6 அப்பெரழிவு நிகழ்ந்து 65 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த தினத்தில் ஜப்பானில் உள்ள நினைவுச் சின்னத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, இறந்த தங்கள் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.  சாலைகளில் போவோர், வருவோர் கூட குண்டு வீசப்பட்ட காளை 8:15 மணிக்கு தங்கள் வேலைகளை நிறுத்தி, மறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் மீண்டும் தொடர்வது வழக்கம். இந்த குண்டு வெடிப்போடு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து ஜப்பான் சரணடைவதாக கையெழுத்திட்டது.
   நம்ம Computer ல நாம பாட்டுக்கு வேலை செய்துகிட்டு இருப்போம். திடீரென எதோ ஒரு காரணத்துக்காக ரொம்ப அவசரமா ஒரு வலை பக்கத்த திறப்போம். அந்து Load ஆகும் போது ஒரு நீளமான கோடு வரும் அப்புறம் அந்த கோடு Screen முழுக்க விரியும். என்னன்னு பாத்தா எதாவது ஒரு விளம்பரம் வந்து நிக்கும். அப்படியே நம்ம Monitor அ தூக்கி போட்டு ஒடச்சி போட்டுலாம் போல தோணும். ஆனா அதெல்லாம் செய்யாம Close Button எங்க இருக்கன்னு தேடி, அத அழுத்திட்டு வேலைய பாப்போம்.

   இதை தடுப்பதை பற்றி ஏற்கனவே வின்மணி எழுதிய பதிவில் நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி இல்லை எனில் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு வாங்க. பார்த்தாச்சா? அவங்கதான் சொல்லிட்டன்களே, நீ என்னாத்த புதுசா சொல்ல போற-னு கேக்குறிங்களா? அவசரப்படாதிங்க சொல்லுறேன்.

   வின்மணி எழுதிய பதிவில் ஒரு தளம் விளம்பரங்களை தடுக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். நான் சொல்ல போவதில் ஒரு ப்ரோக்ராம் விளம்பரங்களை தடுப்பதை நாம் பார்க்கப்போகிறோம். புரியலையா? அவங்க சொன்னதுல ஒவ்வொரு தடவையும் அந்த தளத்துக்கு போய் நாம உலாவனும் (Browsing).  ஆனா இதுல ஒருதடவ இன்ஸ்டால் பண்ணிட்டாளே போதும். அப்புறம் நாம இத இன்ஸ்டால் பண்ணினதையே மறந்துடலாம்.  இது என்ன Horlicks, Complan விளம்பரம் மாதிரி இருக்குதுன்னு நினைகிறீங்களா??? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியணும்-னு சொன்னேன்.

Picture 1
   அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கூகிள் Chrome இன்ஸ்டால் பண்ணி இருக்கிங்களா? நீங்க Chrome பயன்படுத்தினா இந்த பாராவ படிக்காம அடுத்த பாராவ படிங்க... அப்புடி இல்லையா? நான் தான் முன்னாடியே Chrome பத்தின அருமை பெரும எல்லாம் சொன்னேனே.... இன்னும் இன்ஸ்டால் பண்ணாம என்ன பண்ணுனீங்க?... சரி பொழச்சி போங்க. இங்க கிளிக் செஞ்சி இன்ஸ்டால் செய்த பின்ன இந்த பதிவ தொடர்ந்து படிங்க.

Picture 2
   Chrome ன் வலது மூலையில் உள்ள ஸ்பேனர் வடிவத்தில் உள்ள செட்டிங்க்சை கிளிக் செய்து (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் கீழுள்ள Get more extensions என்பதை கிளிக் செய்யவும். பிறகு வரும் வலை பக்கத்தில் Most popular என்பதை கிளிக் செய்த (Picture 2) பின் வரும் பட்டியலில் முதலில் உள்ள AdBlack என்பதை கிளிக் செய்து install என்ற Button னை  (Picture 3) அழுத்தவும். அப்பால வரும் dialog box லும் install என்ற Button னை (Picture 3) அழுத்திய பின் ஏதேனும் விளம்பரம் உள்ள பக்கத்தை திறந்து பாக்கவும். விளம்பரங்களை தடுப்பதால் அந்த பக்கம் முன்பைவிட வேகமாக திறப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Picture 3
   ஒழுங்கா வேலை செய்தா? சரி விளம்பரத்த பர்க்குவர்க்காகவே ஒரு பக்கத்த திறந்து பாக்கணும். அப்ப என்ன செய்யலாம் னா.... போன பாரா ஆரம்பத்துல சொன்ன மாதிரி (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் AdBlack என்பதற்கு நேராக உள்ள Option (Picture 4) என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பக்கம் திறக்கும் அங்குள்ள tab ல் கடைசியாக உள்ள Exicuted Sites (Picture 5) என்பதில் கிளிக் செய்து காணப்படும் எழுத்துப் பெட்டியில் விளம்பரத்தினை தடுக்க தேவையில்லாத வலை பக்கத்தின் முகவரியை கொடுத்து Add (Picture 5) செய்ய வேண்டும். இதில் Domain Name மட்டும் கொடுக்கவும் " http://, / " போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

Picutre 4
   அப்படி இல்லாமல் எல்லா பக்கத்தையுமே விளம்பரத்துடன் பார்க்க வேண்டும் என்றால் AdBlack அருகில் (Picture 4) உள்ள Disable என்பதை கிளிக் செய்வதன் மூலம் செயலிழக்க செய்ய முடியும். வேண்டும் என்றால் Enable செய்து கொள்ளலாம். இது மட்டுமல்ல இன்னும் பயனுள்ள Extensions பல இருக்கின்றது பிடித்திருந்தால் மற்றவற்றையும் பயன்படுத்தி பாருங்கள்.

Picutre 5
   இது தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாகவும், தெரிந்தவர்களுக்கு நியாபகமூட்ட கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை எழுதியுள்ளேன்.

   இருங்க, புரிஞ்சதா இல்லையா? செய்து பார்த்திங்களா, இல்லையா? ஏதும் டவுட் வந்துச்சா, இல்லையா? சொல்லிட்டு போகணும் ஆமா....
   65 ஆண்டுகளாக அழிந்ததாக கருதப்பட்ட "தேவாங்கு" இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது தேவாங்கை தேடுவது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வேறொரு இனத்தை அங்கு தேடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம் யார் கண்டது??? இதுக்கு மேல பேசுனா உள்ள தூக்கி போட்டாலும் போட்டுடுவாங்க. அதனால் நான் நேரா மேட்டருக்கு வரேன்.

   "தேவாங்கு" இதை பற்றி அதிகம் கேள்வி பட்டு இருக்க மாட்டோம். நமது நண்பர் ஒருவர் 'தேவாங்கு பக்கங்கள்' என அவரது பக்கத்துக்கு தலைப்பிட்டுள்ளார். பெரியவங்க "மூஞ்ச பாரு தேவாங்கு மாதிரி!" அப்புடின்னு திட்டுவதை பார்த்திருக்கேன்.(யாரை திட்டினாங்க-னு கேக்காதிங்க என்னோட சீக்ரெட் எல்லாம் நான் வெளியில சொல்லுறது இல்ல).  இது மரங்களுக்கு இடையே வாழும் 350 கிராம் வரை எடையுள்ள ஒரு சிறு பாலூட்டி விலங்கு. முட்டை, பூச்சி, பல்லி போன்றவற்றை உண்ணும். இது இரவில் தான் இறை தேடும். இரவில் இதன் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

   உலகில் மனிதன் காடுகளை மட்டும் அல்ல அதில் உள்ள பல உயிரினங்களை அழித்துக்கொண்டு இருக்கிறான். இந்த தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. மனிதனின் சுயநலம் காரணமாக இலங்கையில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவை அழியும் நிலைக்கு காரணமானது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். அங்கு இதன் எண்ணிக்கை 100 க்கும் குறைவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளனர். 

   தமிழகத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொய்கைமலை வனப்பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருவதாக கருதப்படுகிறது.  இங்கும் இவை நிம்மதியாக இல்லை. குறவர் போன்றவர்களால் அதிகமாக வேட்டையாடப்படுகிறது. ஆஸ்துமா நோயை குணமாக்கும் என்ற தவறான எண்ணத்திலும் இவை வேட்டையாடப்படுகிறது. எனவே தேவாங்கை காக்க மணப்பாறை பொய்கைமலையில் சரணாலயம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

   எது எப்படி இருப்பினும் விலங்குகள் மட்டும் அல்ல மனிதனும் தன் அழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறான் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
    கூகிள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய வாடிக்கையாளர்கள் எப்போதும் வேறு ஒருவரிடம் செல்ல விடக்கூடாது என்று எப்பொழுதோ முடிவுக்கு வந்து விட்டது.  தனது சேவைகளை நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டே வருகிறது..... அதில் ஒரு படியாகத்தான் இன்று பல கணக்குகளை பயன்படுத்த வகை செய்துள்ளது.

    Google Chrome, நல்ல வேகமான, எளிமையான உலாவி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. நாம் Chrome ல் உலாவும் போது ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்கு இருந்தால்,  அந்த இரண்டாவது கணக்கை திறக்க நாம் Internet Explorer அல்லது Mozilla fire fox திறந்து அதில் நமது இரண்டாவது கணக்கை திறப்போம்.  இப்போது அதையும் நீங்கள் Chrome ல் தான் திறக்க வேண்டும் என கூறி கூகிள் இப்போது தனது உலாவியின் சமீபத்திய பதிப்பில் உள்ள  incognito window மூலம் எத்தனை GMail கணக்கையும் திறக்க முடியும். இதை பெற Chrome உலாவியில் Ctrl + Shift + N போன்றவற்றை அழுத்துவதன் மூலம் பெறலாம். அல்லது வலது மூலையில் settings கிளிக் செய்து அதில் New incognito window என்பதை கிளிக் செய்வதன் மூலமும் பெற முடியும்.
    இதற்காக மற்றொரு வழியும் அறிமுகப்படுத்தி உள்ளது இதன் சிறப்பு... மற்ற உலாவிகளில் இனி நாம் ஜீமெயில் திறந்து வைத்துகொண்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு இன்னொரு ஜீமெயில் கணக்கை திறந்தால் நமக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை பயன்படுத்தபோகிறீர்களா என்ற செய்தி வரும் இதில் நாம் வேண்டும் என்றால் ON என்பதையும் வேண்டாம் என்றால் OFF என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன் மூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தி பார்த்து கருத்துகளை கூறவும்......


   இதை பார்த்தாவது திருந்த வேண்டியவங்க திருந்தினா சரி...... இந்த படத்தை அனைவரையும் காண, கீழ உள்ள ஐகான்ல ஓட்டு போடணும். என்ன சரியா?......
  செம்மொழி மாநாடு முடிஞ்சாச்சு. அதுக்காக தமிழ மறந்துட முடியுமா? இம்மாநாடு பற்றிய சில முக்கியமான தகவல்கள் நாம் தெரிந்துகொள்ளக்கூடியவை.  கம்பீரமான திருவள்ளுவரின் உருவசிலை, அதன் பின்னணியில் சுனாமி அலை. "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என்ற அவரது வரிகள், நன்றாகத்தான் வடிவமைத்திருக்கிறார் ஓவியர் சந்ரு.

   ஆம் நண்பர்களே இந்த இலச்சினை உருவாக்கியது எழும்பூர் கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. சந்ரு.  இதை உருவாக்க அவரது தலைமையில் ஒருமாதம் முயற்சித்து உருவாக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான அறிவிப்பு வந்தவுடன் தஞ்சை தமிழ் பல்கலைகழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் அவரை தொடர்பு கொண்டு வடிவமைக்க கூறியுள்ளார்.  அதில் திருவள்ளுவர் சிலை இருக்க வேண்டும் எனவும், பெருமை, பண்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் வெளிப்படுத்துவதாக அது இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

   15 நாட்களில் 25 க்கும் மேற்பட்ட இலச்சினைகளை திரு ராஜேந்திரனிடம் காண்பித்து இருக்கிறார் அவர் மேலும் எதிபார்ப்பதாக கூறி, தமிழின் பெருமைகளை தவிர மேலும் அதன் அழிய நிலை தன்மையையும் அது வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

   சமீபத்திய அழிவு சுனாமிதான் அதை பின்னனியி வைக்கலாமா என இலச்சினையில் அழிவை காட்டுவதால் பிறர் விமர்சிக்கக்கூடும் என்ற ஒரு சிறிய பயத்துடன் கேட்டார்.  'தமிழும் வள்ளுவமும் எந்த எதிர்ப்பு பேரலையையும் தாண்டி உலகுள்ளவரை வாழும்' என்பதற்கு அடையாளமாக சுனாமியை வைத்தால் பொருத்தமாகத்தான் இருக்கும் என அவர் கூறியதால், இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.

   வடிவமைத்த பிறகு தலைப்பு என்ன வைக்கலாம் என திரு ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் முதல்வரிடம் கேட்டு சொல்கிறேன். என கூறி முதல்வரிடம் கேட்டுள்ளார்.  முதல்வர் எழுதி கொடுத்த தலைப்பு "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்". அது திரு சந்ருவிடம் அனுப்பப்பட்டது. அவரது கையெழுத்திலேயே வைத்து விடலாம் என இலச்சினையில் அதை பொருத்திவிட்டார்.

   பின்பு முதல்வரிடம் இலச்சினை அனுப்பப்பட்டது. முதல்வருக்கு மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் தொல்லியல் தரவுகள் சரிதானா என்று திரு ஐயவதாரம் மகாதேவனிடம் உறுதி படுத்திய பின்னர், தலைமைச் செயலகத்தில் ஐயவதாரம் அவர்களால் வெளியிடப்பட்டது.

   இலச்சினையில் உள்ள தரவுகள் மொத்தம் ஏழு இதில் முதல் தரவு - இறைவனை குறிப்பதாகவும், இரண்டாவது தரவு - உலக அளவில் அசையும் உருவத்தை முதலில் பதிவுசெய்த சிற்பம். மூன்றாவது தரவு - காளை (விவசாய அடிப்படை சிறப்பை குறிப்பதற்காக). நான்காவது தரவு - கப்பல் (நமது வணிக சிறப்பை உணர்த்துகிறது). ஐந்தாவது தரவு - கலைமான் (நமது கலைச் சிறப்பை உணர்த்துகிறது). ஆறாவது தரவு - சங்க இலக்கியத்தில் புறத்திணையில் வரும் வேலன் வேட்டயடுதலை குறிக்கிறது. எழாவது தரவு - நீரருந்தும் காளை.

   இவை அனைத்தும் தமிழரது கலாச்சார பெருமையை எடுத்துக்கூறும் என்ற நோக்கத்துடன் வடிவமைத்து இருக்கிறார்கள்.

   மனிதனால் நம்பமுடியாத அளவிற்கு பல செயல்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், மெய்சிளிர்க்கக்கூடிய அளவிலும் காணப்படுகின்றன. அவற்றை காணும் போது இது போன்றும் நடக்குமா? என்று வியக்கக்கூடிய அளவிலான புகைப்படங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

நகரும் கற்கள்

   ஒரு குண்டுக்கல் தானாக நகர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இவை காணப்படுகின்றன.
   பனிக்கட்டி உருகும் நிலையில் அதனால் எளிதாக நகர முடியும். இதே போன்று தான் இந்த கற்களும் நகருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மழைநீர் கற்களுக்கு அடியில் உறைந்து இருக்கும் போது பலத்த காற்று அடித்தல் நீர் உருகி கற்கள் நகரும் என்பது அவர்களது விளக்கம். இவை எப்போது எந்த திசையில் நகரும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.

குழம்புப்பாறைத்தம்பம்


   இவை ஆப்ரிக்கா, ஆசியா, ஈரோப், வடக்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மனிதன் உருவாக்கியது போல மிக அழகாக அமைந்துள்ளது. 
மேலும் குறிப்புக்கு http://www.luzicke-hory.cz/mista/index.php?pg=zmpansc

    நீல துளைகள்

       இந்த துளைகள் நீருக்கடியில் வட்டமாக 8000 மீட்டர் ஆழம் கூட இருக்கக்கூடும் எனவும், இதன் அகலம்(விட்டம்) இரண்டிலிருந்து இருநூறு மீட்டர் வரை காணப்படும்.  இதன் அகலமானது 250 வருடத்திற்கு ஒரு சென்டி மீட்டர் வளரும் என கணித்திருக்கிறார்கள். ஐஸ்லாந்தில் இவை காணப்படுகின்றன.

    சிவப்பு அலைகள்

       அமில மழை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பள்ளி வகுப்புகளில் படித்திருப்போம்.  கடலுக்கு அருகில் செல்லும் மேகங்கள் சில நேரங்களில் அமிலங்களை கொட்டிவிட்டு போகும். இந்த அமிலங்கள் கடல் நீரோடு வினைபுரிந்து இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும்.  இந்த அலைகள் கடல் உயிரினங்களுக்கு தீங்கினை விளைவிக்கக்கூடும்.

    பனி வட்டங்கள்

       இது பனிக்கட்டி தவிர வேறு ஏதும் காணப்படாத நீர்நிலைகளில் காணப்படும். கரைபகுதியில் அல்லாமல் நடுபகுதியில் பனிக்கட்டி தோண்டுவதால் ஏற்படுகிறது. இது அதிகபட்சமாக 500 அடி விட்டம் வரை காணப்படலாம்.

    விழிவில்லை மேகங்கள்

       ஓரிடத்தை மையமாகக்கொண்டு காற்று நீண்ட நேரம் சுழலும் போது அதை சூழ்ந்துள்ள மேகங்கள் இது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இவை சில நேரங்களில் மேலும் கீழும் வேறு வேறு வடிவங்களாக நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

    ஒளி தூண்கள்

       பக்கவாட்டு மேகங்களின் வழியே சூரிய ஒளி ஊடுரும் போது இது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

    ஒளி வட்டம்

       இதுவும் மேலே பார்த்த ஒளி தூண்கள் போல மேகம் படிக உருவில் இருக்கும் போது அதன் வழியே ஊடுருவும் சூரிய ஒளி இவ்வாறு தோன்றும்.

    நெருப்புச் சுழல்

       காட்டில் நெருப்பு பற்றி எரியும் போது காற்று சுழல் ஏற்பட்டால் காற்றுடன் சேர்த்து நெருப்பும் சுழல்வதால் இந்த நம்பமுடியாத சுழல் நமது கண்களை மிரட்டும்.  இது நகர்தபடியே 10 அடி அகலத்தில் 30 முதல் 200 அடி வரை எழும்பும்.


       இருங்க இருங்க.... எதாவது கருத்து சொல்லிட்டு, ஒட்டு போட்டுட்டு போங்க....

      ஏறட்டும் ஏறட்டும், அப்பவாவது ட்ராபிக்கும், அச்சிடேன்ட்டும் குறையுதான்னு பார்ப்போம்.  என்னதான் விலை ஏறினாலும் நாங்க வண்டிவிட்டு ஈரான்கமட்டோம்னு இருகிரவனுங்க எத்தனையோ பேர்...

      நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள...

      செய்த போதனைஎல்லாம் போதலயாம்..... இன்னும் அவர் சேவையை தொடரனுமாம்!!

      மனித இனம் மட்டும் ????

     சொல்லி இருந்தா நானும் என் கட்டுரைய எடுத்துட்டு வந்திருப்பேனே.... எவளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா???

        நீங்கள் browsing சென்டரில் கணினி பயன்படுத்துபவரா? இல்லை அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?  ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்காகவே....


       நம்மில் பலர் மெயில் அனுப்பும்போது படங்கள், ரகசிய வார்த்தைகள், அல்லது முக்கிய நிகழ்வுகளை நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.  அப்பொழுது தேவையான படங்கள் அல்லது வரிகளை நாம் ஒரு இடத்திலிருந்து காபி, பேஸ்ட் செய்து நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.

      நமது அலுவலகத்திலோ அல்லது சென்டேரிலோ வேறொருவரது விரல்கள் ctrl+V என்ற விசைகள் அழுத்தப்பட்டால் உங்களது வரிகள் அல்லது படங்களை அவர் பார்க்க நேரிடும்.

    இதை தவிர்க்க எனக்கு தெரிந்தவரை இரண்டு வழிகள் உள்ளது. 
    1. MS Office இல் உள்ள clip bord.
    2. Clip bord Viewer.
    1. MS Office இல் உள்ள clip bord:
    Office 2007 இல் ஏதேனும் ஒரு World, Exel, PPT, எதுவாயினும் Home என்ற ribbon இல் கீழுள்ள clip bord என்ற பட்டிக்கு நேராக உள்ள ஒரு சிறிய dorp box ஐ கிளிக் செய்யுங்கள். பிறகு கிடக்கும் கிளிப் Bord என்ற pane இல் Clear All என்ற butten ஐ click செய்தால் நாம் காபி செய்தது அழிக்கப்பட்டு விடும்.





       (Office 2003 பயன்படுத்தினால் Edit -> Office Clip Bord என்பதை கிளிக் செய்தால் இந்த pane ஐ பெறலாம்.)

    2. Clip bord Viewer:
       Start -> Run கொடுத்த பிறகு அங்குள்ள எழுத்து பெட்டியில் " clipbrd " என டைப் செய்து ஓகே கொடுப்பதன் மூலம் கிடைக்கும் விண்டோவில் delete butten ஐ அழுத்திய பிறகு கிடைக்கும் dialog box ல் ஓகே கொடுப்பதன் மூலம் நாம் காபி செய்ததை அழிக்க முடியும்.

       இனி நீங்கள் உசாராக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.  செய்து பார்த்து தங்கள் கருத்துக்களையும், சந்தேகம் இருந்தால் அதையும் சொல்லுங்கள் பார்க்கலாம்....




    Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.

    Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.


    Bandwidth: ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.


    Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.


    Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.


    Cache: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள் கையில் இதற்கென புதியதகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப் பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.


    Cookie: வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.


       நன்றி தினமலர்....
       வாஷிங்டன் : சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,"அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.

       போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், "அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள 145 இடங்களில், இந்தியா 128ம் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டில் 122வது இடம் பெற்றிருந்தது. அதற்கு முன் 2007ல் வெளியான பட்டியலில் இந்தியா 109ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெறாத பாகிஸ்தான், இந்த பட்டியலில் 145ம் இடத்தை பிடித்துள்ளது.ரஷ்யாவில் இப்போது அமைதி என்பது அதிகம் இல்லை. 

       அதனால், ரஷ்யா இப்பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது. சீனாவும் தரம் இறங்கி 80வது இடத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் மிகமோசமாக அடிமட்டத்தில் உள்ளன.

       நன்றி தின மலர்....
        பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. மின் விளக்குக்கு எந்த உலோகக் கலவை இழை உகந்ததாக இருக்கும் என்பதை கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடினார்.

       இதுகுறித்து எடிசன் கூறும்போது, “முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையை செய்யத் தூண்டியது. விளக்குக்கு சரியான மின்னிழையைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குத் தான் 5999 முறை தேவைப்பட்டது. மேலும் 5999 உலோக இழைகளை மின் விளக்குக்கு பயன்படுத்த முடியாது என்பதையும் கண்டுபிடித்துள்ளேன்” என்றார்.

       ஒரு சமயம் ஒரு விருந்தினரின் வீட்டில் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியைப் பார்க்கும்படியான கட்டாயம் ஏற்பட்டது. அது அவருடைய மனதைக் கவரவில்லை என்பதால் பெரிதும் சலிப்புற்றார் எடிசன். அவர் வெளியே புறப்பட முயற்சி செய்யும்போதெல்லாம் யாராவது ஒருவர் அவர் கையைப் பிடித்து பேசியபடி ஹாலுக்குள் அழைத்துச் சென்றபடி இருந்தனர். ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி இறுதியில் கதவோரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

        அப்போது மிகவும் உற்சாகமாக வந்த ஒருவர் எடிசனிடம், “நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுடன் இருப்பது எங்களுக்கு நீங்கள் அளித்த கவுரவம். அடுத்து நீங்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறீர்கள்” என்றார்.

       அதற்கு “இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று கண்டுபிடிக்கவிருக்கிறேன்!”என்று சட்டென பதில் கூறினார் எடிசன்.
     - ஈகரை....
       " முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

    புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.30 கோடி திரட்டி உள்ளார்.


           உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆன் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

         ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.

        யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

    நீங்கள் ஜி மெயில் பயன்படுத்துபவரா?  ஆம் என்றல் இந்த பதிவு உங்களுக்காக தான்.

       நம்மில் பலர் படம்(picture) அனுப்ப வேண்டும் என்றல் Attach file கொடுத்து தான் அனுப்புவோம்.  ஒருவேளை நீங்கள் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டு வருவதற்கு copy, paste செய்து முயற்சித்து இருந்தால் மெயிலை பெறுபவர் அதை காண இயலாது.

      ஆனால் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டுவருவது மிகவும் எளிதான ஒன்றே....   எப்படி என்பதை பின்னே காண்போம்....







    விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள். இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும்.
    Powered by Blogger.